search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் ரஷிய போர்"

    • உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினால், ரஷியா ஏவுகணை மூலம் தாக்குதல்
    • உக்ரைன் டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தியது. தற்போது ரஷியா கெர்சனில் தாக்குதல் நடத்தியுள்ளது

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளையும் தேவையானபோது பயன்படுத்தி வருகிறது.

    உக்ரைன் டிரோன்களை ரஷியா இடைமறித்து அழித்தபோதிலும், உடனடியாக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இரு தினங்களுக்கு முன் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனேட்ஸ்க் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதியில் உக்ரைன் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டியிருந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு கெர்சன் பிராந்தியத்தில் ரஷியா கொத்துக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

    பிறந்து 23 நாட்களே ஆன பெண் குழந்தை, தனது 12 வயது சகோதரர் மற்றும் தந்தையுடன் உயிரிழந்துள்ளது. ஸ்டானிஸ்லேவ் கிராமத்தில் நடைபெற்ற தாக்குதலில் கிறிஸ்துவ பாதிரியார் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

    • உக்ரைன் மீது ரஷியா ராக்கெட் தாக்குதல் நடத்தியல் 3 பேர் உயிரிழப்பு
    • ரஷியாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி

    ரஷியா மற்றும் உக்ரைன் பரஸ்பர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டால், பதிலடியாக அடுத்தநாள் ஏவுகணை தாக்குதலை ரஷியா நடத்துகிறது. ரஷியா தாக்குதல் நடத்தினால், உக்ரைன் பதிலடியாக டிரோன் தாக்குதலில் ஈடுபடுகிறது. இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படுகிறது.

    நேற்றுமுன்தினம் இரவு உக்ரைன் மாஸ்கோவை குறிவைத்து இரண்டு டிரோன் தாக்குதலை நடத்தியது. ஆனால், ரஷியா அதை நடுவானில் தடுத்து அழித்ததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் நேற்றிரவு பதிலடியாக ரஷியா ஜபோரிஷியா நகரில் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுஉலை இருக்கும் நகரம் இதுவாகும்.

    அதேவேளையில் மாஸ்கோவில் உள்ள செர்கிவ் பொசாட் என்ற இடத்தில் ராணுவத்திற்கான பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடிவித்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 60 பேர் படுகாயம் அடைந்துள்ளது. இந்த வெடிவிபத்தால் 38 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமைடைந்துள்ளது. அருகில் உள்ளவர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    தொழிற்சாலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சில ரஷியா மீடியாக்கல் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷியா விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்த தகவல் தெரிவிக்கவில்லை.

    • ரஷிய- உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
    • இரு நாடுகளும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன

    ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவத்தால் ஆக்ரமித்தது.

    சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டு ரஷியா மேற்கொண்ட இந்த ஆக்ரமிப்பிற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது.

    இந்த ரஷிய-உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்து பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களாக தாக்குதல்களில் இரு நாடுகளும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன.

    இந்நிலையில் உக்ரைன் இரு டிரோன்களை ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி ஏவியது. இவற்றை ரஷியாவின் விமானப்படை தாக்கி அழித்தது. மாஸ்கோவின் தெற்கு புறநகரில் உள்ள டொமோடிடோவோ (Domodedovo) பகுதியின் மீது ஏவப்பட்ட ஒரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது.

    தலைநகரின் மேற்கு பகுதியில் உள்ள மின்ஸ்க் நெடுஞ்சாலையின் மேலே இன்னொரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது. வீழ்த்தப்பட்ட டிரோன்களின் பாகங்கள் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவோ அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல்கள் இல்லை.

    ரஷியாவின் மாஸ்கோ நகரை குறிவைத்து ஒரே வாரத்தில் 3-வது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன்- ரஷியா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை
    • உக்ரைனில் இருந்து தானியம் ஏற்றுமதி ஆவதற்கு ரஷியா தொடர்ந்து முட்டுக்கட்டை

    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த ஜி-20 மாநாட்டில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதுதான் முக்கிய தலைப்பாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ''எங்களுடைய கூட்டணி நாடுகளுடன் நடைபெறும் உரையாடலில் உக்ரைன் போர் குறித்ததுதான் முக்கிய தலைப்பாக இருக்கும். இனிவரும் உரையாடல்களில் இதற்குதான் முக்கியத்துவம். ஜி-20 மாநாட்டில் இது உண்மையாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை'' என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

    ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. உக்ரைன் தானிய ஏற்றுமதி செய்ய முடியாத அளவிற்கு ரஷியா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இது உலகளவில் தானிய தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • உக்ரைன்- ரஷியா போரில் பெலாரஸ் ரஷியாவுக்கு உதவு செய்து வருகிறது
    • பெலாரஸ் அண்டை நாடுகளான போலந்து லிதுவேனியா பாதுகாப்பை அதிகரித்துள்ளது

    உக்ரைன்- ரஷியா இடையே 17 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ரஷியாவுக்கு அண்டை நாடான பெலாரஸ் ஆதரவாக உள்ளது. அதேவேளையில் லிதுவேனியா, போலந்து நாடுகள் நேட்டோ படையில் உள்ளது. இதனால் எல்லையில் லிதுவேனியா மற்றும் போலந்து நாடுகள் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    கடந்த ஜூன் மாதம் வாக்னர் குழு திடீரென ரஷிய ராணுவதிற்கு எதிராக கலகம் செய்து, ஆயுத கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சித்தது. ஆனால், பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு, கலகம் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தார்.

    வாக்னர் குழு பெலாரஸ் செல்வது, ரஷியா அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளாது என ஒப்பந்தும் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படையைச் சேர்ந்தவர்கள் பெலாரஸ் வந்துள்ளனர். இதனால் லிதுவேனியா, போலந்து நாடுகள் மேலும் பாதுகாப்பை எல்லையில் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இரு நாடுகள் எல்லையில் பெலாரஸ் ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் மேலும் தங்களது பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    இரண்டு நாடுகளுக்கும் இடையில் ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கலினிங்ராட் பிராந்தியத்தில் ஆத்திரமுட்டும் செயலில் ரஷியா மற்றும் பெலாரஸ் ஈடுபட்டு வருவதாக லிதுவேனியா, போலந்து தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் பெலாரஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டு தங்கள் எல்லைக்குள் அத்துமீறி பறந்ததாக போலந்து குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் பெலாரஸ் அதை மறுத்துள்ளது.

    லிதுவேனியா, போலந்து எல்லையில் அருகே உள்ள கிரோட்னோ மாகாணத்தில் பெலாரஸ் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

    போலந்து லிதுவேனியா எல்லையை இணைக்கும் 96 கி.மீட்டர் நீளம் கொண்ட எல்லைப் பகுதி சுவால்கி என அழைக்கப்படுகிறது. இந்த பகுதி ரஷியா கட்டுப்பாட்டில் இருக்கும் கலினிங்ராட் பிராந்தியத்திற்கும் பெலாரஸ் எல்லைக்கும் இடையிலான பகுதி.

    இந்த பகுதிதான் நேட்டோவுக்கும், ரஷியாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட முக்கிய புள்ளியாக இருக்கிறது. ரஷியா இந்தப் பகுதியை ஆக்கிரமித்தால் லிதுவேனியா, லித்வியா, எஸ்டோனியா போன்ற நேட்டோ உதவி நாடுகளில் இருந்து போலந்து தனியாக பிரிக்கப்பட்டு விடும். இது ரஷியாவுக்கு ஆதாயமாக இருக்கும் என ராணுவ நடவடிக்கை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பால்டிக் கடலில் உள் கலினிங்ராட் பிராந்தியத்திற்கும் ரஷியாவிற்கும் இடையில் நிலப்பரப்பு தொடர்பு கிடையாது.

    • உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    • மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    உக்ரைன் ரஷியா இடையேயான போர் ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்து வருகிறது. அவ்வப்போது, ரஷியா உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    கிழக்கு உக்ரைன் நகரமான போக்ரோவ்ஸ்க் மீது இரண்டு ரஷிய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இதேபோல் நடந்த இரண்டாவது தாக்குதலில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் உயர்மட்ட அவசர அதிகாரி கொல்லப்பட்டார். மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 19 போலீஸ் அதிகாரிகள், ஐந்து மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பின்வாங்காமல் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்
    • ஆனால் துறைமுகத்தில் தாக்குதல் நடைபெற்றதாக ரஷியா தெரிவிக்கவில்லை

    ரஷிய- உக்ரைன் போர் 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இரு தரப்பிலும் உயிர்ச் சேதமும், கட்டிட சேதங்களும் தொடர்கின்றன. ஆனாலும், பின்வாங்காமல் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கருங்கடல் பகுதியின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ரஷியாவின் மிகப்பெரிய துறைமுகம் நோவோரோசிஸ்க் (Novorossiysk). உக்ரைனின் உளவுத்துறையும், கடற்படையும் இணைந்து நடத்திய கடல் டிரோன் தாக்குதலில் ரஷியாவின் பெரிய கப்பலான ஒலெனெகோர்ஸ்கி கோர்னியாக் (Olenegorsky Gornyak) தாக்கப்பட்டது.

    450 கிலோ டைனமைட் வெடிப்பொருளுடன் சென்ற உக்ரைனின் ஆளில்லா சிறுகப்பல்கள் (Sea Drone) தாக்கியதில், அந்த கப்பல் பலத்த சேதமடைந்திருப்பதாகவும், அது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இனி பயன்படாது எனவும் உக்ரைன் தரப்பு தெரிவிக்கிறது.

    இரு ஆளில்லா விமானங்களை இடைமறித்து வீழ்த்தியதாக தெரிவித்த ரஷியா, துறைமுகத்தில் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கவில்லை.

    ரஷிய ஏற்றுமதிகளுக்கு நோவோரோசிஸ்க் துறைமுகம் ஒரு முக்கியமான இடம். 2-ம் உலகப் போரின்போது கட்டமைக்கப்பட்ட 'லேண்டிங் ஷிப்' எனப்படும் வகையை சேர்ந்த ஒலெனெகோர்ஸ்கி கப்பல், ராணுவ தளவாடங்களை நீர் மற்றும் நிலத்தில் இருந்து எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    எனவே இப்படி ஒரு தாக்குதலை உக்ரைன் இலக்காக வைத்திருப்பதாக தெரிகிறது.

    • உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா எதிர்ப்பு
    • ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டின் முக்கிய அதிகாரிகளுக்கு தடைவிதிப்பு

    சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த வருடம் பிப்ரவரி 24 அன்று, ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து போரிட்ட உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் உதவி வருகின்றன. இந்த உதவிகளின் ஒரு பகுதியாக அவை ரஷியா மீது விரிவான பொருளாதார தடைகளை உருவாக்கி, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

    500 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் இந்நிலையில், ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த 10 பேருக்கும், ரஷியாவின் 35 நிறுவனங்களுக்கும் ஆஸ்திரேலியா தடைவிதித்துள்ளது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ரஷியாவின் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறைகளில் உள்ள 35 நிறுவனங்கள் மீதும், ரஷியாவின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் பெலாரஸின் மூத்த ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் மீதும் தடை ஆஸ்திரேலியா தடை விதிக்கிறது.

    ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இது கொண்டு வரப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ரஷிய முதல் துணை பிரதமர் ஆண்ட்ரே பெலோசோவ் மற்றும் துணை பிரதமர் டிமிட்ரி செர்னிஷென்கோ மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த சில மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    தவிர, முக்கிய ரஷிய பாதுகாப்பு நிறுவனங்களும், அந்நாட்டின் மிக பெரிய ராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் ஆகியோரும் இந்த தடைகள் பட்டியலில் அடங்குவர். இப்புதிய கட்டுப்பாடுகள், அணுசக்தி நிறுவனங்கள் மற்றும் ஆர்க்டிக் வளங்களை பிரித்தெடுப்பதில் ஈடுபட்டுள்ள ரஷிய நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அடுக்குமாடி கட்டிடம் மீது தாக்குதல்.
    • கருங்கடல் தானிய ஒப்பந்தம் புதுப்பிக்காத நிலையில் ரஷியா தொடர்ந்து தாக்குதல்.

    500 நாட்களை கடந்து நடைபெறும் ரஷிய- உக்ரைன் போரில் இருதரப்பும் மாறிமாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷியா சம்மதித்தது. அந்த தானிய ஏற்றுமதி கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாமல் இருக்கவும் ரஷியா சம்மத்தது.

    இந்த ஒப்பந்தம் இரு தினங்களுக்கு முன் காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க ரஷியா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    இந்நிலையில் நேற்றிரவு துறைமுக நகரமான உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில் ரஷியா தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. தொடர்ந்து 2-வது நாளாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    கருங்கடல் ஒப்பந்தம் காலாவதியான பின் இப்பகுதியில் ரஷியா நடத்தும் மிகப்பெரிய இரண்டாவது தாக்குதல் இது என இன்று காலை தெரிவித்த அப்பகுதி ஆளுநர் ஓலெக் கிளிப்பர், மக்களை தங்கள் வசிப்பிடங்களிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    இத்தாக்குதலின் விளைவுகளை காட்டும் வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் ஒரு தெருவில் பல ஜன்னல்கள் உடைக்கப்பட்டு ஏராளமான கண்ணாடித் துகள்கள் சிதறிக்கிடக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தெரிகிறது.

    ராணுவ தாக்குதல்களின்போது ஒலிக்கப்படும் எச்சரிக்கை சைரன்கள், உக்ரைன் முழுவதும் 10-ற்கும் மேற்பட்ட இடங்களில் ஒலிக்கப்பட்டிருக்கிறது.

    நேற்றைய முன்தினம் நடைபெற்ற ரஷிய தாக்குதலில், உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள கட்டிடங்கள் சேதமானது.

    அதற்கு பின் ரஷியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், கருங்கடல் வழியாக நடைபெறும் தானிய ஏற்றுமதியின் எதிர்காலம் குறித்து ஒரு மறைமுக எச்சரிக்கையை வெளியிட்டதுடன் ஒடேசா துறைமுகத்தை உக்ரைன் "போர் நோக்கங்களுக்காக" பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கருங்கடலில் கலிப்ர் ஏவுகணைகள் ஏவப்பட்டதை கண்டறிந்ததாக உக்ரைனின் விமானப்படையும் தெரிவித்திருக்கிறது.

    • 70 ஆயிரம் மக்கள் வசித்த பாக்முட் ரஷிய தாக்குதலில் சீர்குலைந்தது
    • எதிர்தாக்குதலில் உக்ரைன் படை ஏழு கி.மீட்டர் வரை முன்னோக்கி சென்றுள்ளது

    கடந்த வருடம் பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் இதனை எதிர்த்து போராடி வருகிறது. 500 நாட்களுக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ரஷியாவிலிருந்து கடினமான தாக்குதல்களை சந்தித்து வருவதாக கூறிய உக்ரைன் இதனை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களையும், பீரங்கிகளையும் வழங்குமாறு அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுக்கு கோரிக்கை வைத்தது.

    ரஷிய படைகள் சென்ற மே மாதம் உக்ரைன் நாட்டின் கிழக்கு நகரமான பாக்முட்டைச் சுற்றியுள்ள பல சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கைப்பற்றியது. அப்பகுதிகளை இன்று தங்கள் படைகள் மீட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் பல நவீன ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால் உக்ரைனில் வேரூன்றிய ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் கடுமையாக போரிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    "கடந்த ஒரு வாரத்தில் மேம்படுத்தப்பட்ட திறனுடன் எங்கள் படைகள் பாக்முட் திசை நோக்கி சென்றது. இதன் பயனாக சுமார் 7 கிலோமீட்டர் பகுதி ரஷிய ஆக்ரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆனால் "கார்கிவை சேர்ந்த குப்யான்ஸ்க் (Kupyansk) பகுதியில் ரஷிய படைகள் கடந்த வார இறுதியில் இருந்து தீவிரமாக முன்னேறி வருகின்றன", என்று உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.

    70 ஆயிரம் மக்கள் வசித்த நகரமான பாக்முட் ரஷிய தாக்குதலுக்கு உள்ளாகி சீர்குலைந்தது. இந்நகரம் ஒயின் மற்றும் உப்புச் சுரங்கத்திற்கு பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2 ஆளில்லா விமானங்களும் கருங்கடல் பகுதி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
    • உக்ரைன் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வெளியாகவில்லை.

    மாஸ்கோ:

    ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து 1½ ஆண்டுகளை கடந்துவிட்டது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பல நகரங்கள் உருகுலைந்து விட்டன.

    இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    உக்ரைன் அரசு கிரீமிய தீபகற்ப பகுதிகள் அருகே 7 ஆளில்லா டிரோன்கள் மற்றும் நீருக்கடியில் 2 ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

    இந்த தாக்குதல் முயற்சியில் உயிரிழப்போ அல்லது பாதிப்புகளோ எதுவும் ஏற்படவில்லை. 2 ஆளில்லா விமானங்களும் கருங்கடல் பகுதி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. மற்ற டிரோன்கள் போர் படைகளை கொண்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவித்து உள்ளது.

    ஆனால் இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வெளியாகவில்லை.

    கிரீமியா தீபகற்பத்தில் இருந்து ரஷ்யாவுக்கு வர இணைப்பு மேம்பாலம் உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் அந்த மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த பாலம் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குண்டு வெடிப்பில் சேதமடைந்தது. இதற்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியது. ஆனால் அதையும் உக்ரைன் அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது
    • எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பரஸ்பர தாக்குதல் நடத்துவோம்

    உக்ரைன்- ரஷியா போர் 500 நாட்களை கடந்து இன்னும் நீடித்து வருகிறது. ரஷிய தாக்குதல் நடத்த தொடங்கியபோது, உக்ரைன் தாக்குதலுக்கு உள்ளாகி வந்தது. தற்போது எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. மேற்கத்திய நாடுகளும் உதவி செய்து வருகிறது. இதனால் ரஷியாவால் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை.

    கடந்த வாரம் அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகளை (cluster bombs) உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தது. அந்த வெடிகுண்டுகள் உக்ரைனை சென்றடைந்து விட்டது. இது ரஷியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

    கொத்து வெடிகுண்டுகள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதை வழங்கியுள்ளது.

    இதுகுறித்து ரஷிய அதிபர் புதின் கூறுகையில் ''எங்களிடம் கொத்து வெடிகுண்டுகள் போதுமான கையிருப்பு உள்ளது. அவர்கள் எங்களுக்கு எதிராக அதை பயன்படுத்தினால், நிச்சயமாக பரஸ்பர தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது'' என்றார்.

    ரஷிய வீரர்களை வெளியேற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்துவோம் என உக்ரைன உறுதி அளித்துள்ளது. 

    ×